9 நாள் தள்ளிவைக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்!

சனி, 4 டிசம்பர் 2021 (16:49 IST)
இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் 9 நாட்கள் தள்ளிவைக்கபப்ட்டுள்ளது.

இந்திய அணி  டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ‘தொடர் ரத்தாகுமா என்பது பற்றி இப்போதே கூற முடியாது. இதுபற்றி பிசிசிஐ மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே வீரர்களை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இன்று பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிட்டதை விட 9 நாட்கள் தாமதமாக தொடங்க உள்ளதாம். முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்க உள்ளதாம். டி 20 போட்டிகள் நடக்காது என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்