ஐபிஎல் தொடரில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் இவர்தான்!

ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (08:15 IST)
ஐபிஎல் தொடரில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர் இவர்தான்!
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் தொடரில் உலகின் பல நாடுகளின் வீரர்கள் விளையாடி வரும் நிலையில் முதல் முறையாக சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் களமிறங்க உள்ளார்
 
ஐபிஎல் அணியில் விளையாட உள்ள சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் பெங்களூரு அணியில் விளையாட முதல் முறையாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெங்களூர் அணியில் இருந்த ஆடம் ஜாம்பா, டேனியல் சாம்ஸ் ஆகியோர் அணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ள வீரர்களில் ஒருவர் தான் சிங்கப்பூரை சேர்ந்த டீம் டேவிட் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இலங்கை வீரர்களான சமீரா மற்றும் ஹசரங்கா ஆகியோர்களும் பெங்களூர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியின் மீதி போட்டிகள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்