பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற குவாலிபையர் 2 போட்டியில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டம் ஆடி தனது அணியை இறுதி போட்டிக்கு தகுதி பெற செய்ததை அடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நேற்று அகமதாபாத்தில் மழை பெய்ததால் தாமதமாக போட்டி தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், ஸ்டொய்னிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் ஆகியோர் அதிரடியாக விளையாடியதால், அந்த அணியின் ஸ்கோர் 203 என உயர்ந்தது.
இதனை அடுத்து 204 என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களான ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் குறைந்த ரன்களில் அவுட் ஆனாலும், அதன் பின் இங்லீஷ் சுமாரான தொடக்கத்தை கொடுத்தார்.
அதனை அடுத்து களத்தில் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியாக விளையாடி 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் அடித்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ஆடிய அவர், அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இறுதி போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.