நாம ஜெயிச்சிட்டோம்..! சவுதி அரேபியாவில் லீவு அறிவித்த மன்னர்!

புதன், 23 நவம்பர் 2022 (09:33 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் இன்று சவுதி அரேபியாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் அர்ஜெண்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இது மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் சவுதி அரேபியாவின் வெற்றியை அம்மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் ஒருநாள் விடுமுறையை அறிவித்துள்ளார் சவுதி மன்னர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்