டெஸ்ட் தொடர்: வில்லனான இந்திய வீரர் சகா!!

சனி, 19 நவம்பர் 2016 (11:40 IST)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.




 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. 
 
இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்ததது.
 
இரண்டாவது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து வீரரான ஹமீத்தை, இந்திய விக்கெட் கீப்பர் சகா, ரன் அவுட்டாக்கினார்.
 
ஆனால், இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை, மிகச்சுலபமாக அவுட்டாக்க கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டார் சகா. 
 
சகா, ஸ்டோசுக்கு மறுவாழ்வு கொடுக்க, அதை சரியாக பயன்படுத்திய ஸ்டோக்ஸ், அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்துள்ளது இங்கிலாந்து.

வெப்துனியாவைப் படிக்கவும்