படம் வெற்றியடைய நள்ளிரவில் கோவிலுக்கு சென்ற கிரிக்கெட் கடவுள்!!

செவ்வாய், 23 மே 2017 (14:45 IST)
இந்திய கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள பிரபல பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.


 
 
சச்சின் டெண்டுல்கரில் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகயுள்ளது. திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு பல புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
 
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் நேற்று நள்ளிரவு 3.30 மணிக்கு மும்பையில் உள்ள பிரசித்த பெற்ற சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். சச்சின் படத்தின் வெற்றிக்காகவே கோயிலுக்குப் போய் பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்