218 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்

ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (17:53 IST)
முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 217 ரன்கள் குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் - ராஜஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.
 
20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பெங்களூர் அணி விளையாட உள்ளது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
பெங்களூர் அணி சார்பில் வோக்ஸ் மற்றும் சாஹல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்