உலக பேட்மிண்டன் இறுதி சுற்று; திடீரென விலகிய பி.வி.சிந்து!

திங்கள், 14 நவம்பர் 2022 (08:33 IST)
உலக பேட்மிண்டன் இறுதி போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டிகளில் இருந்து விலகுவதாக பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து. முன்னாள் உலக சாம்பியனான பி.வி.சிந்து உலகளவில் டென்னிஸ் தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ளார். உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி அடுத்த டிசம்பர் மாதம் 14 – 18 வரை சீனாவின் குவாங்சோவ் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பி.வி.சிந்து கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென வெளியேறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆனால் அந்த விளையாட்டில் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

காயத்திலிருந்து முழுமையாக குணமடைய கால அவகாசம் தேவைப்படுவதால் சீனாவில் நடைபெறும் உலக பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கவில்லை என்றும், அடுத்த ஜனவரி மாதம் முதல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தொடங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்