மலேசிய ஓபன் பேட்மிண்டன் : கால் இறுதியில் பிவி சிந்து தோல்வி!

வெள்ளி, 1 ஜூலை 2022 (17:37 IST)
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 
 
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் தாய் சூ இங் கை ஆகிய இருவரும் மோதினர். 
 
முதல் சுற்றை பிவி சிந்து கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு சுற்றுகளை சீன வீராங்கனை கைப்பற்றியதை அடுத்து இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்