பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

திங்கள், 3 ஜனவரி 2022 (13:18 IST)
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் முகமது ஹபீஸ் என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இவரது ஆட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்