ஃபாலோ ஆன பாகிஸ்தான் நிலை என்ன? இன்று கடைசி நாள் ஆட்டம்

செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (07:12 IST)
ஃபாலோ ஆன பாகிஸ்தான் நிலை என்ன?
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கடந்த 21ஆம் தேதி மூன்றாவது கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாகிஸ்தான் அணி ஃபாலோ ஆன் ஆனதால் மீண்டும் பேட்டிங் செய்தது. அந்த அணி நேற்று 4-வது நாள் ஆட்ட முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அபித் அலி 42 ரன்களும் கேப்டன் அசார் அலி 29 ரன்களும் எடுத்துள்ளார்கள் கேப்டன் அசார் அலி ஆட்டமிழக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போதைய நிலையில் பாகிஸ்தான் அணியை 210 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பதும், இன்னும் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி வீழ்த்தி விட்டால் அந்த அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்