இன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில், முப்படைகள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் உறுதி செய்தார்.
“ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்ட முறையில், துல்லியத் தகவல்களின் அடிப்படையில் நடந்தது. பயிற்சி முகாம்கள் உட்பட முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்பு செயல்திறனை உலகிற்கு காட்டும் வகையில் அமைந்துள்ளது” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.