சொந்த செலவில் கிரிக்கெட் மைதானம் ஏற்பாடு செய்த நடராஜன்!

புதன், 15 டிசம்பர் 2021 (18:24 IST)
கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமத்தில் சொந்த செலவில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார் நடராஜன் என்பதும் அவர் தனது அபார பந்து வீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாமல் இருக்கும் நடராஜன் தனது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளும் கூடிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Happy to Announce that am setting up a new cricket ground with all the facilities in my village, Will be named as *NATARAJAN CRICKET GROUND(NCG)❤️
* #DreamsDoComeTrue

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்