''எனது டென்னிஸ் பேட்டை காணவில்லை'' - ரபேல் நடால் புகார்

திங்கள், 16 ஜனவரி 2023 (21:38 IST)
ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் என்ற டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இப்போட்டியில், உலகின் முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில், ஆடவர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் கலந்து கொண்டார்.

இப்போட்டியில், ஜேக் டிரேப்பரை வீழ்த்தி இவ்வாண்டின் முதல் வெற்றியைப் பதிவவு செய்துள்ளார்.

இந்த நிலையில், நடாலின் விருப்பத்திற்குரிய பேட்டை ஒரு சிறுவன் எடுத்துச் சென்றதாக நடால் புகாரளித்திருந்தார்.

அதன்பின்னர்,  ரிப்பேர் செய்ய வேண்டுமென்று நடாலின் பேட்டை சிறுவன் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதும் இப்பிரச்சனை தீர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்