மகளிர் ஐபிஎல்: இறுதி போட்டிக்கு நுழைந்தது மும்பை..!

வெள்ளி, 24 மார்ச் 2023 (22:44 IST)
மகளிர் ஐபிஎல்: இறுதி போட்டிக்கு நுழைந்தது மும்பை..!
கடந்த சில நாட்களாக மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் லீக் போட்டிகள் முடிந்து இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. மும்பை மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த போட்டி சற்றுமுன் தொடங்கிய நிலையில் உத்தரப்பிரதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
 
இதனையடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய உபி அணி, 17.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
வரும் ஞாயிறு அன்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்