அரைசதம் அடித்த முகமது ஷமி: எழுந்து நின்று கைதட்டிய விராத் கோஹ்லி!

திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (17:43 IST)
அரைசதம் அடித்த முகமது ஷமி: எழுந்து நின்று கைதட்டிய விராத் கோஹ்லி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளரான முகமது ஷமி அரை சதம் அடித்ததை அத்து கேப்டன் விராட் கோலி எழுந்து நின்று கைதட்டி அவருக்கு கௌரவம் அளித்தார்.
 
லார்ட்ஸில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று 5அம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்தில் மளமளவென விழுந்தாலும் ரஹானே மற்றும் புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தினால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டு உள்ளது.
 
இந்த நிலையில் தற்போது முகமது ஷமி மற்றும் பும்ரா ஒன்பதாவது விக்கெட்டுக்கு மிகவும் அபாரமாக விளையாடி வருகின்றனர். முகமது ஷமி 52 ரன்களும் பும்ரா 30 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி அரைசதம் அடித்ததும் கேப்டன் விராத் கோஹ்லி எழுந்து நின்று கைதட்டினார். இந்த நிலையில் இந்தியா தற்போது 259 ரன்கள் முன்னிலையில் இருப்பதால் இந்த போட்டி டிராவில் முடிவடைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்