மிதாலிராஜ் புதிய சாதனை: குவியும் பாராட்டுக்கள்!

சனி, 19 மார்ச் 2022 (15:50 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான மிதாலிராஜ் இன்று புதிய சாதனை செய்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்தை பிடித்த வீராங்கனையுடன் சமன் செய்துள்ளார் 
 
50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த பெருமை இதுவரை நியூசிலாந்து அணியின் டெப்பி ஹாக்லி என்பவருக்கு மட்டுமே இருந்தது
 
இந்த நிலையில் இன்று 50 ரன்களுக்கு மேல் அடித்ததை அடுத்து மிதாலிராஜ் அந்த சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்