இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த தயார்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

வியாழன், 29 டிசம்பர் 2022 (15:33 IST)
இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உலக கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றன என்பதும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடந்து நீண்ட வருடமாகி விட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது
 
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையின் போது இரு அணிகளும் மோதிய போட்டியை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குவிந்து உள்ளதை அடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்