தோல்விக்குக் காரணம் என்ன?விராட் கோலி ஆதங்கம்!

சனி, 19 டிசம்பர் 2020 (16:00 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

இந்தியா மற்றும அஸிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸி 191 ரன்களும் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்ஙினிஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது. அதையடுத்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. ஆனால் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இந்தியா வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் எளிதான 90 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் கோலி ‘இப்போது நாங்கள் இருக்கும் உணர்வை விவரிப்பது கடினம். 50 சொச்சம் ரன்கள் முன்னிலை பெற்றும் பேட்டிங்கில் மொத்தமாகச் சரிந்துவிட்டோம். ஒரே ஒரு மணி நேரத்தில் வெற்றி பெறவே சாத்தியமில்லாத நிலையில் இருந்தது வருத்தம்தான். எங்கள் ஆட்டத்தில் இன்னும் தீவிரம் இருந்திருக்கலாம். முதல் இன்னிங்ஸிலும் அவர்கள் இதே போல பந்து வீசினார்கள். ஆனால் நாங்கள் இப்போது ரன்கள் சேர்க்கவெண்டும் என்ற ஆசையில் விக்கெட்டை இழந்துவிட்டோம். ’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்