’சாதனைக்கு ஜஸ்ட் ஒரு ரன் மிஸ்’...தோனிக்கு வந்த துரதிர்ஷ்டம் ...

திங்கள், 29 அக்டோபர் 2018 (20:03 IST)
கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிற எல்லா வீரர்களுக்கும் உள்ள ஒரு லட்சியம் 10000 ரன்கள் அடிப்பதாகும்.முன்னாள் இந்திய கேப்டன் தோனிக்கு இன்று அந்த வாய்ப்பு ஒரு நூலிழையில் பறிபோனது.
தன் பார்ம் மீது எழும் பல்வேறு சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தோனி 23 ரன்களில் ஆட்டமிழ்ந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
 
அதாவது இன்னும் ஒரு ரன்கள் அடித்து இருந்தால் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருப்பார்.
 
ஆனால் அவுட் ஆகி எல்லோரையும் எமாற்றிவிட்டார்.அடுத்த முறையாவது தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்