பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் மட்டுமே உறுதி: 3 இடங்களுக்கு போட்டி போடும் 4 அணிகள்

செவ்வாய், 17 மே 2022 (08:56 IST)
பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் மட்டுமே உறுதி: 3 இடங்களுக்கு போட்டி போடும் 4 அணிகள்
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைய இருக்கும் நிலையில் குஜராத் மட்டுமே தற்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கு நான்கு அணிகள் போட்டி போட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் தொடரில் தற்போதைய நிலையில் ராஜஸ்தான் அணி, லக்னோ அணி  ஆகிய இரண்டு அணிகளும் 16 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் 14 புள்ளிகளுடன் 4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜஸ்தான், லக்னோ, டெல்லி, பெங்களூர் ஆகிய நான்கு அணிகளில் 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால் இந்த நான்கு அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது., இந்த போட்டி புள்ளி பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்