சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:53 IST)
இந்தியா வாங்க மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 
93 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் மற்றும் 87 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் சதத்தை மிஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முன்னதாக வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலையில் இருந்தது
 
இந்நிலையில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்த உடன் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்