இரண்டாவது டெஸ்ட்: இந்தியா 316 ரன்களில் ஆல் அவுட்

சனி, 1 அக்டோபர் 2016 (13:21 IST)
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 316 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது.

 
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட்  கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தொடங்கியது.
 
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்திலிருந்த ஜடேஜா 14 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த புவனேஷ் குமாரும், முகமது ஷமியும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 
 
இந்திய அணி 316 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. விரக்திமான சாகா மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 85 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார்.
 
நேற்றைய ஆட்டத்தின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் கேப்டன் கோஹ்லி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் புஜாரா 87 ரன்களும், ரஹானே 77 ரன்களும் எடுத்து இந்திய அணிக்கு பெரிதும் கைகொடுத்தது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்