40 ஓவர் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு

வியாழன், 6 அக்டோபர் 2022 (16:07 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமானதை அடுத்து 40 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது 
 
சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சற்றுமுன் வரை தென் ஆப்பிரிக்க அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டியில் மேலும் மழை குறுக்கிடாமல் 40 ஓவர் போட்டி முழுமையாக நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்