ஓப்பனர்கள் ரோஹித்-ராகுல் அவுட்.. காப்பாற்றுவார்களா விராத்-சூர்யகுமார்??

வியாழன், 10 நவம்பர் 2022 (14:20 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே உலக கோப்பை டி20 அரையிறுதிப் போட்டியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஓபனிங் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அவுட்டான நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகின்றனர்
 
ஓபனிங் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் 5 ரன்களுடன் அவுட் ஆகிய நிலையில் ரோஹித் சர்மா சற்றுமுன் 27 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து தற்போது விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடுகின்றனர்
 
இந்திய அணி சற்று முன் வரை 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் அடித்து உள்ளது என்பதும் விராட் கோலி 78 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் வெல்ல வேண்டுமானால் இங்கிலாந்து அணி குறைந்தது 180 இலக்கு வைக்க வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்