விராட் கோலி மற்றும் தோனிக்கு ஐசிசி விருது....ரசிகர்கள் மகிழ்ச்சி

திங்கள், 28 டிசம்பர் 2020 (15:39 IST)
கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுக்கு விராட் கோலியும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தோனியும் ஐசிசியின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசி அமைப்பு வருடம் தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கிக் கெரவித்துவருகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை உள்ளிட்ட மூன்று கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவரும் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ள தோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும், இந்திய அணியின் தற்போதைய கேப்டனும் இளைஞர்களின் சிறந்த வீரராக உள்ள விராட் கோலிக்கு கடந்த பத்தாண்டுகளில் ஐசிசியின் சிறந்த வீரர்  மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்