அனில் கும்ளே பதவி விலகல்: சுனில் கவாஸ்கர் காட்டம்!!

வியாழன், 22 ஜூன் 2017 (12:33 IST)
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே தனது பதவியில் இருந்து விலகியதற்கு சுனில் கவாஸ்கர் கட்டமாக கருந்து தெரிவித்துள்ளார்.


 
 
அனில் கும்ளேவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை பதவியில் நீடிக்குமாறு பிசிசிஐ அனில் கும்ப்ளேவை கேட்டுக்கொண்டது.
 
ஆனால் கும்ளே தனது பதவியில் இருந்து விலகினார். இதற்கு எனக்கும், கோலிக்கும் இடையில் சுமுகமான நிலை இல்லை என்று கூறியிருந்தார். 
 
இது குறித்து, கவாஸ்கர் கூறியதாவது, கோலிக்கும், கும்ளேவிற்கு இடையிலான மோதல் குறித்து எனக்கு சிறிய அளவிலேயே தெரியும். அனில் கும்ளே தலைமை பயிற்சியாளரானதில் இருந்து இந்தியா அனைத்தையும் வென்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் கும்ப்ளே அதிக அளவில் தவறு செய்தார் என்று என்னால் பார்க்க முடியவில்லை.
 
அனில் கும்ளே போன்ற போராட்டக்காரர்கள் தங்களது நிலையில் உறுதியாக இல்லாமல் இருப்பதை முதன்முறையாக பார்க்கிறேன். கும்ளே பதவியை தொடர்வார் என்றுதான் நான் நினைத்தேன். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சோகம் என தெரிவித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்