இந்த நிலையில் 12 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தை இடத்தை பிடித்தனர். இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதில் உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதால் அவர் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.