லக்னோ அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்?

புதன், 24 நவம்பர் 2021 (16:47 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக ஆரம்பிக்கப்படும் லக்னோ அணிக்காக பயிற்சியாளராக செயல்பட கேரி கிறிஸ்டனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் அடுத்த ஆண்டு முதல் இணைய உள்ளன. அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் இணைய உள்ளதால் 10 அணிகள் அடுத்த ஆண்டு முதல் கலந்துகொள்கின்றன. இந்நிலையில் ஆர் பி எஸ் ஜி குழுமம் கைப்பற்றியுள்ள லக்னோ அணிக்கு பயிற்சியாளராக செயல்பட இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளராகவும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரருமான கேரி கிறிஸ்டனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிரது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்