ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா… தினேஷ் கார்த்திக் பகிர்ந்த புகைப்படம்!

வெள்ளி, 16 ஜூலை 2021 (16:36 IST)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தினேஷ் கார்த்தி சூசகமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இருக்கும் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹாவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இங்கிலாந்து தொடரில் யார் விக்கெட் கீப்பிங் செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எல் ராகுல் இருப்பதால் அவர் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

ஆனால் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கிரிக்கெட் கிட்டை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் விக்கெட் கீப்பிங் செய்ய தயாராக உள்ளதாக கூறும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்