சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை

புதன், 14 செப்டம்பர் 2022 (21:48 IST)
சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் செக் குடியரசு வீராங்கனை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 
 
இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 130வது இடத்தில் உள்ள குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருவிர்டோவா, 95வது இடத்தில் உள்ள சுவீடன் வீரர்  ரெபெக்கா பீட்டர்சனை எதிர்கொண்டார் 
 
இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற எளிய சுற்றில் அவர் வெற்றி பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்ற லிண்டா ஃப்ருவிர்டோவாவுக்கு டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்