டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு!

புதன், 4 மே 2022 (19:10 IST)
டாஸ் வென்ற தோனி எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியான இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றுள்ளார்
 
இன்றைய போட்டி புனே மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் சற்று முன் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து  இன்னும் ஒரு சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது
 
சென்னை அணி புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் புள்ளி பட்டியலில் உயர வாய்ப்பு உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்