டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு: பஞ்சாபுக்கு வாழ்வா? சாவா? போட்டி!

ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:09 IST)
டாஸ் வென்ற சென்னை பந்துவீச முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53 ஆவது லீக் போட்டி இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி இன்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பதும் இல்லையெனில் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னையை பொருத்தவரை இந்த போட்டியில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இரண்டு அணியிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
 
சென்னை: ருத்ராஜ், டீபிளஸ்சிஸ், அம்பத்திராயுடு, தோனி, ஜெகதீசன், ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், இம்ரான் தாஹிர், நிகிடி
 
பஞ்சாப்; மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன், மந்தீப்சிங், தீபக் ஹூடா, நீஷம், ஜோர்டான், அஸ்வின், முகமது ஷமி, பிஷ்னாய்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்