எனக்கான நேரம் கண்டிப்பாக வரும்! ஜெய்ஸ்வால் நம்பிக்கை!

vinoth

திங்கள், 22 செப்டம்பர் 2025 (09:54 IST)
இந்திய அணிக்கு மிகச்சிறந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரராக உருவாகி வருகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐபிஎல் தொடர் மூலம் கவனம் பெற்ற அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்னும் அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.

டெஸ்ட் மற்றும் டி20  என இரண்டு வகையான ஆட்டத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ஆனால் தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் அவர் இடம் பிடிக்கவில்லை. மாறாக அவரை விட திறன் குறைவாக சர்வதேச டி 20 போட்டிகளில் செயல்பட்டுள்ள ஷுப்மன் கில்லை கோலிக்கு அடுத்து இந்தியக் கிரிக்கெட்டின் அடையாளமாக மாற்றுவதற்காக ஆசியக் கோப்பை அணியில் எடுத்துள்ளனர்.

தனக்கு இடம் கிடைக்காதது குறித்துப் பேசியுள்ள ஜெய்ஸ்வால் “அணித் தேர்வு என்பது தேர்வுக் குழுவினரின் கையில் உள்ளது. நான் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன். என் நேரம் வரும்போது அனைத்தும் சரியாக இடத்தில் பொருந்தும்படி நடக்கும். இப்போதைக்குக் கடினமாக உழைத்து நான் என் பேட்டிங்கை மேம்படுத்துவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்