டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் செய்ய முடிவு!

வெள்ளி, 20 மே 2022 (19:12 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று 68வது லீக் போட்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராஜஸ்தான் அணிக்கு இன்றைய போட்டி மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை அணியை வென்று விட்டால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் தோனியின் கடைசி போட்டி என்று கூறப்படும் இந்த போட்டியில் தோனி வெற்றி பெற அதிக முயற்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்