இந்த நிலையில், சிஎஸ்கே அணி அடுத்ததாக பெங்களூரு அணியுடன் வரும் 28ஆம் தேதி மோதுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், சிஎஸ்கே அணியின் அடுத்த வெற்றியை நேரில் பார்க்க விரும்புபவர்கள், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த தொடரை பொருத்தவரை, சிஎஸ்கே மற்றும் பெங்களூர் ஆகிய இரண்டு அணிகளுமே தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் அணி எது என்பதை வரும் 28ஆம் தேதி தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.