சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் 3வது இடம்..!

திங்கள், 17 ஏப்ரல் 2023 (23:20 IST)
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணியின் டூபிளஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது.

ஆனால் அவர்கள் இருவரும் அவுட் ஆனவுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறியதால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்