காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி போராடி தோல்வி

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி போராடி தோல்வி
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது
 
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்