சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

வியாழன், 9 மார்ச் 2023 (14:31 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி தொடங்க உள்ளது.
 
மார்ச் 17ஆம் தேதி முதல் ஒரு நாள்போட்டி மும்பை வான்கடே மைதானத்திலும் மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் 2வது ஒரு நாள்போட்டியும், மார்ச் 22ஆம் தேதி சென்னையில் 3வது ஒரு நாள் போட்டியும் நடைபெற உள்ளன. 
 
இந்த நிலையில் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 13ஆம் தேதி முதல் இணையதளங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 13ஆம் தேதி காலை 11 மணி முதல் சேப்பாக்கம் ஸ்டேடியத்திலும் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறைந்த பட்ஜெட் விலை 1200 என்றும் அதிகபட்ச டிக்கெட் விலை 10,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியை பார்க்க வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து உணவு கொண்டு வரக்கூடாது என்பது உள்பட ஒரு சில நிபந்தனைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்