ஜடேஜா வேகப்பந்துவீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு இடம் கிடைக்கும்… சஹால் கருத்து!

சனி, 22 மே 2021 (15:40 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிந்தர ஜடேஜா பற்றி சஹால் நகைச்சுவையான கருத்தைக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு திறமைவாய்ந்த சுழல்பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரும் கிடைத்தனர். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அணிக்குள் ஜடேஜா எனும் ஆல்ரவுண்டர் வந்ததுதான்.

இதுபற்றி பேசியுள்ள யஷ்வேந்திர சஹால் ‘ஜடேஜா வேகப்பந்து வீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு சேர்ந்து விளையாட வாய்ப்புக் கிடைக்கும்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்