ஆறாவது விக்கெட்டுக்கு நங்கூரம் பாய்ச்சிய இங்கிலாந்து வீரர்கள்… மளமளவென உயரும் ஸ்கோர்!

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (17:29 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஓவல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ஷர்துல் தாகூர் ஐம்பத்தி ஏழு ரன்களும், விராத் கோலி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் ஷர்துல் தாகூர் ஐம்பத்தி ஏழு ரன்களும், விராத் கோலி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 191 ரன்களில் ஆட்டம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 53 ரன்களுக்கு 3 விக்கெட்களோடு நேற்றைய ஆட்டம் முடிந்தது. இந்நிலையில் இப்போது இரண்டாம் நாள் போட்டி தொடங்கிய உடனேயே க்ரைக் ஓவர்டோன் மற்றும் மலான் ஆகியவர்களின் விக்கெட்களை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் பேர்ஸ்டோ மற்றும் ஓய்லி போப் ஆகிய இருவரும் கூட்டணி அமைத்து துரிதமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். இந்த இருவரின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் போராடி வருகின்றனர். இப்போது இங்கிலாந்து அணி 137 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்