கொரோனாவில் இருந்து மீண்ட டெல்லி வீரர்… அணியில் இணைந்தார்!

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (13:20 IST)
டெல்லி அணியின் சுழல்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளார்.

டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னை 3 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இப்போது அவர் முழுவதுமாக குணமாகிவிட்டதால் அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்