164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (14:03 IST)
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையே நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே பெர்த் நகரில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 598 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 182 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் டிக்ளேர் செய்தது.
 
ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு 498 என்ற இலக்கை நிர்ணயித்தது இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 333 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அடுத்து ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்