இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து நொறுக்கும் சுப்மன் கில்..!

ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (15:48 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் சூப்பர் 4 போட்டி இன்று நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சற்றுமுன் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா களத்தில் இறங்கினார். 
 
ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும் பிறகு சும்மண் கில் அடித்து விளையாடி வருகிறார் என்பதும் அவர்  30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து உள்ளார் என்பதும் இதில் 9 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  சற்றுமுன் வரை இந்திய அணி 10 ஓவர்களில் 61 ரன்கள் எடுத்துள்ளது. 
 
 இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி வர அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்