ஒரே ஓவரில் ஆட்டத்தை திருப்பிய தூத்துக்குடி அணி! காரைக்குடி காளை பரிதாபம்

திங்கள், 31 ஜூலை 2017 (06:22 IST)
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் நேற்றைய த்ரில் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி தோற்கடித்தது



 
 
முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதனையடித்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 
12 பந்துகளில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் வாஷிங்டன் சுந்தரும், சும்ராவும் அதிரடியாக விளையாடி 19 வது ஓவரில் 19 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பெற்று தந்தனர்.. கடைசி ஓவரின் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்