மீண்டும் முதலிடத்தை பிடித்த மும்பை! ஐதராபாத்தை வென்றது

ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (20:11 IST)
மீண்டும் முதலிடத்தை பிடித்த மும்பை! ஐதராபாத்தை வென்றது
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதலாவது போட்டியில் மும்பை அணி ஐதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 174 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோல்வி அடைந்தது 
 
இந்த போட்டியின் மிக அபாரமாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த போட்டியை வென்றதன் மூலம் மீண்டும் புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லி மற்றும் பெங்களூர் அணி இரண்டாவது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்