தை திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது தெரியுமா....?

வியாழன், 13 ஜனவரி 2022 (16:37 IST)
தை திருநாள் அன்று பொங்கல் செய்ய பானை வைக்கும் நேரமும் பொங்கும் நேரமும் நல்ல யோக முடைய நேரங்களாக இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.


பொங்கல் திருநாள் அன்று, காலம் முழுவதும் நமக்கு உணவும் திறனும் வழங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது நம்  மரபாகும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14:1:2022 அன்று வெள்ளிக்கிழமை வருகின்றது. பொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது? என்று தெரிந்துக்கொள்வோம்.

காப்பு கட்ட: மார்கழி 29 - 13:01:2022 வியாழக்கிழமை காலை 7:30 முதல் 9:00 வரை உகந்த நேரம் ஆகும். மேலும் காலை 10:30 முதல் 12:00 வரை உகந்த நேரம் ஆகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்: பொங்கல் திருநாள் 14:01:2022அன்று வெள்ளிக்கிழமை ம்தியம் 12:00- 1:30 மணி வரையிலும் மற்றும்  மாலை 4: 30 - 6:00 மணி வரையிலும்  பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

மாட்டுப் பொங்கல்: மாட்டுப் பொங்கல் அன்று (சனிக்கிழமை) பூஜை செய்ய நல்ல நேரம்: தை 02 - 15:01:2022 சனிக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த  நேரமாகும். மேலும் 10:30 முதல் 12:00 மணி வரையாகும்.

கனுப்பொங்கல்: கனுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்: தை 03 - 16:01:2022 ஞாயிற்றுக்கிழமை 6:00 - 7:30 வரையிலும் மற்றும் 10:30 - 12:00 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்