புலிக்குட்டி விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது

புதன், 7 செப்டம்பர் 2022 (19:43 IST)
புலிக்குட்டியை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
வேலூரில் 25 லட்சத்துக்கு புலிக்குட்டி விற்பனை செய்வதாக ஆன்லைனில் இளைஞரொருவர் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வனத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்தனர் 
 
விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பார்த்திபன் என்ற 24 வயது இளைஞர் தான் இந்த விளம்பரத்தை கொடுத்தவர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்த வனத்துறையினர் காவல்துறையின் உதவியுடன் அவரை கைது செய்தனர் 
 
கைதான பார்த்திபன் சென்னையில் செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதாகவும் அவரது விற்பனையகத்தில் பல விலங்குகள், பறவைகள் இருப்பதாகவும் ஆன்லைன் மூலம் பல பறவைகள் விலங்குகளை இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்