பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் கைது

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (23:17 IST)
சென்னை புறநகர் ரயிலில் ஆபாச செய்கை காட்டிய    இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று இரவு நேரத்தில் சென்னை புற நகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறிய வாலிபர் ஒருவர் தனியாக அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆபாசமாக  நடந்துகொண்டார்.இதனால் அப்பெண் கூச்சலிட்டு உடனே தனது செல்போனில் அந்த இளைஞரின் செயலைப்  வீடியோ எடுத்துள்ளார். அடுத்த ஸ்டேசனில் ரயில் நின்றதும் அந்த இளைஞர் ஓடிவிட்டார்.  தாம்பரம்  ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்