இதில், வெங்கடாசலம் எழுதியுள்ள புத்தகத்தின் கருத்துகள், எழுத்து நடைமுறை ஆகியவற்றை சிறிது மாற்றி அமைத்து தா.பாண்டியன் தனது புத்தகத்தை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இது குறித்து வெங்கடாசலம், கோவை மாநகர காவல் ஆணையரிடம் புத்தக உரிமம் தொடர்பாக, தா.பாண்டியன் மீது புகார் அளித்துள்ளார். மேலும், தா.பாண்டியன் மீது புத்தகத்தை காப்பி அடித்து எழுதும் திருட்டு வழக்கைத் தொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.